இளமை பருவம்
இந்த கதை 2000 ஆம் ஆண்டு ஆரம்பம் ஆனது. ஏன்னா நம்மா கதாநாயகி அப்பதான் பிறந்தாங்க, ஞாயிறு கிழமை. நேரம், தேதி கேக்காதிங்க ஞாபகம் இருக்காது. ஏனென்றால் ஐந்து பொண்ணுங்க, ஆமாங்க நம்ம கதாநாயகிக்கு 3 அக்கா 1 தங்கை இருக்கின்றனர். நம்ம ஷீரோயின் 4 வது பொண்ணு.

பாட்டிக்கு ஆண் குழந்தை பிறகும் அப்படின்னு ஆச ஆனா பிறந்தது எல்லாம் பொண்ணு ஆண் குழந்தை பதிலாக நாங்க வரிசையா 2 வருசத்துக்கு ஒரு பொண்ணுணு 4 பேர் பிறந்தோம், பாட்டிக்கு அடுத்த பிள்ளை பையனாக பிறக்கும் அப்படின்னு நம்பிக்கையாக இருந்தங்க, அப்பா, அம்மா ரண்டு பேரும் ஒரு சில காரணங்களால வெளியூர் செல்லும் கட்டாயம் ஏற்பட்டது, அதனால் முதல் மற்றும் மூன்றாவது குழந்தைகளை மட்டும் தண்ணுடனும் மீதி இருவரையும் பாட்டி வீட்டில் விட்டு விட்டு வெளியூர் சென்றார்கள், ஆனால் இரு குழந்தைகளும் சிறு வயதிலிருந்தே தாய் மற்றும் தந்தை பாசம் இல்லாமல் பாசத்திர்காக ஏங்கினர், 1 வயது முதல் கலை தாயின் அரவணைப்பு இல்லாமல் போனது தந்தையின் பாசமும் கிடைக்கவில்லை. அம்மா அடுத்த குழந்தையை தன் வயிற்றில் சுமந்து பெற்று எடுத்தார் அதுவும் பெண் குழந்தை. கலைக்கு தங்கை பிறந்தாள் ஐவரில் கலையின் தங்கை மட்டுமே மருத்துவ மனையில் பிறந்தாள் மீதி நாளு பேரும் வீட்டிலேயே தான் பிறந்தார்கள்.
ஐந்தும் பெண் குழந்தையா பிறந்ததால் அப்புக்கு புடிக்காம எல்லாரையும் விட்டுட்டு வெளியூர் போய்டாரு.சிறு வயதிலிருந்தே ஐந்து பெண்களும் தந்தையால் வெருக்கப்பாடார்கள். அப்பாவின் அம்மாவும் குழந்தைகளை பிடிக்காமல் அம்மா வேலைக்குச் சென்ற பிறகு சாப்பாடு கொடுக்காமல் கொடுமை படுத்தினார்கள். பாட்டி அம்மா இல்லாத நேரத்தில் அரிசி இருக்கும் அனைத்து பொருட்களையும் தம்பி வீட்டிற்கு, மகள் வீட்டிற்கும் கொடுத்து விடுவார்கள். சில நாட்கள் கழித்து அப்பா வீட்டிற்கு வந்தார் பாட்டி அம்மாவை பற்றி தவறாக கூறினார். அதைக் கேட்டு அப்பா அம்மாவை அடித்து அம்மாவின் உடம்பெல்லாம் காயம். அம்மா ஐந்து குழந்தைகளையும் அழைத்து கொண்டு அம்மாவின் வீட்டிற்கு சென்றார். அப்பாவின் உறவினர்கள் அனைவரும் அம்மாவை வெறுத்தனர். ஐந்து பெண் குழந்தை வைத்துக் கொண்டு உன்னால் சமாளிக்க முடியாது இரண்டு குழந்தைகளை கொண்று விடு இல்லை என்றால் யாருக்காவது விற்று விடு என்று கூறினார்கள். அம்மா அவர்கள் கூறியதற்கு செவி சாய்க்காமல், வளர்த்து விட்டால் எங்கயோ சென்று வாழட்டும் என்று கூறினார்.
Comments
Post a Comment